sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

சிறுமியை 'இன்ஸ்டா' காதலில் வீழ்த்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி * கோவையைச் சேர்ந்த 4 பேர் கைது

/

சிறுமியை 'இன்ஸ்டா' காதலில் வீழ்த்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி * கோவையைச் சேர்ந்த 4 பேர் கைது

சிறுமியை 'இன்ஸ்டா' காதலில் வீழ்த்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி * கோவையைச் சேர்ந்த 4 பேர் கைது

சிறுமியை 'இன்ஸ்டா' காதலில் வீழ்த்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி * கோவையைச் சேர்ந்த 4 பேர் கைது


ADDED : மே 01, 2025 01:24 AM

Google News

ADDED : மே 01, 2025 01:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்:14 வயது சிறுமியை இன்ஸ்டா காதலில் வீழ்த்தி பாலியல் தொழில் ஈடுபடுத்த முயன்றதாக கோவையைச் சேர்ந்த ஐந்து பேர் கும்பலில் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் கோவையைச் சேர்ந்த சக்தி என்பவர் பழகி வந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக இருவரும் பழகிய நிலையில் காதலிப்பதால் சிறுமியை நேரில் பார்க்க ஆசையாக இருப்பதாக கூறி தனிமையில் சந்திக்க வேண்டும் என அழைத்துள்ளார். முதலில் சிறுமி மறுத்தாலும் அவர் வற்புறுத்தியதை தொடர்ந்து குமரி மாவட்டத்திற்கு வந்தால் சந்திக்கலாம் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து சக்தி கோவையில் இருந்து தனது நண்பர்கள் சந்தோஷ், பரத், தோழிகளான வளையாபதி, மஞ்சுளா ஆகியோருடன் கன்னியாகுமரி ஓட்டலில் தங்கி சிறுமியை அங்கு அழைத்துள்ளனர். இதை நம்பி கன்னியாகுமரிக்கு சென்ற சிறுமியை ஆசை வார்த்தை கூறி கோவை அழைத்து செல்ல முயன்றுள்ளனர். அதற்காக பணம் தேவை இருப்பதாக கூறி சிறுமி அணிந்திருந்த ஒன்றேகால் பவுன் நகையை கழற்றி விற்பனை செய்துள்ளனர்.

இந்நிலையில்மகளை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் எனக்கூறி புதுக்கடை போலீசில் புகார் செய்தனர். போலீசார் சிறுமியின் அலைபேசி எண் மூலம் அவர் கன்னியாகுமரியில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்க முயன்றபோது கூட்டத்தில் இருந்த பரத் தப்பி ஓடினார். இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் இவர்கள் கோவையில் பாலியல் தொழில் செய்து வந்ததும், இளம்பெண்களை இன்ஸ்டா மூலம் பழக்கம் ஏற்படுத்தி பாலியல் தொழிலில் தள்ளி வந்ததும் தெரியவந்தது. விற்பனை செய்யப்பட்ட நகை மீட்கப்பட்டது. தப்பி ஓடிய பரத்தை போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us