/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
கொள்ளை முயற்சி அசாம் வாலிபர் கைது
/
கொள்ளை முயற்சி அசாம் வாலிபர் கைது
ADDED : செப் 29, 2024 03:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பீச் சந்திப்பில் சூப்பர் மார்க்கெட்டை ஒட்டி தனியார் வங்கி ஏ.டி.எம்., உள்ளது. நேற்று முன்தினம் இரவு இயந்திரத்தை ஒருவர் உடைக்க முயன்றார்.
போலீசார் வந்தபோது தப்பி ஓடினார். ஐஸ் கம்பெனிக்குள் மறைந்திருந்த அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அசாம் மாநிலம் நரயன் புர்நல்பரி பகுதியைச் சேர்ந்த சம்சுல் அலி 22, என்பது தெரிய வந்தது. சில நாட்களுக்கு முன்னர்தான் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்துக்கு வேலைக்கு வந்துள்ளார்.