/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு
/
கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு
ADDED : டிச 08, 2025 04:48 AM
நாகர்கோவில்: மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் ரஞ்சன். இவரது மனைவி முஸ்கா. இவர்கள், தங்கள் மூன்று குழந்தைகளுடன் நாகர்கோவில் சவேரியார் ஆலய திருவிழாவில் பலுான் விற்பதற்காக வந்துள்ளனர்.
திருவிழா முடிந்து ஊர் திரும்புவதற்காக, நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்தபோது, 3 வயது மகள் சாரா-வை காணவில்லை.
மாவட்டம் முழுதும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. நாகர்கோவில் கள்ளியங்காடு ரோட்டில் குழந்தையுடன் பதுங்கி இருந்தவரை 4 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அவர், நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் லோகேஷ் என தெரிந்தது. கடத்தல் தொடர்பாக அவரிடம் மேல் விசாரணை நடக்கிறது. குழந்தையை, எஸ்.பி., ஸ்டாலின், பெற்றோரிடம் ஒப்படைத்தார்.

