/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
கடத்தப்பட்ட குழந்தை நான்கு மணி நேரத்தில் மீட்பு
/
கடத்தப்பட்ட குழந்தை நான்கு மணி நேரத்தில் மீட்பு
ADDED : டிச 08, 2025 05:24 AM
நாகர்கோவில்: மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ரஞ்சன். மனைவி முஸ்கா. இவர்கள் தங்களது மூன்று குழந்தைகளுடன் நாகர்கோவில் சவேரியார் ஆலய திரு விழாவில் பலுான் விற்பதற்காக வந்துள்ளனர்.
திருவிழா முடிந்து ஊர் திரும்புவதற்காக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்தபோது மூன்று வயது மகள் சாரா-வை காணவில்லை.
மாவட்டம் முழுதும் கண்காணிப்பு கேமராக்கள் காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. நாகர்கோவில் கள்ளியங்காடு ரோட்டில் குழந்தையுடன் பதுங்கி இருந்தவரை நான்கு மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர் நாகர்கோவில் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் லோகேஷ் என்பது தெரிந்தது.
கடத்தல் தொடர்பாக அவரிடம் மேல் விசாரணை நடக்கிறது. எஸ்.பி., ஸ்டாலின் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தார்

