/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
சிறுத்தை குட்டி மீட்பு தாய் சிறுத்தை எங்கே?
/
சிறுத்தை குட்டி மீட்பு தாய் சிறுத்தை எங்கே?
ADDED : பிப் 01, 2024 02:06 AM

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே சிற்றாறு அரசு தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியான சிலோன் காலனி மலைப் பகுதியில், வன விலங்குகள் அடிக்கடி வருவது வழக்கம். எனினும், சிறுத்தைகள் இந்த பகுதியில் இதுவரை தென்பட்டதில்லை.
குடியிருப்பில் தங்கியிருந்த தொழிலாளி நேற்று அதிகாலை 5:00 மணிக்கு வெளியே வந்த போது, நான்கு மாதமேயான சிறுத்தை குட்டி நிற்பதை கண்டு பயந்து ஓடினார்.
அப்போது, திடீரென சிறுத்தை குட்டி, விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கொட்டகைக்குள் புகுந்தபோது தார்ப்பாயில் சிக்கியது. தகவல் அறிந்து வந்த வனத்துறை ஊழியர்கள் சிறுத்தை குட்டியை மீட்டனர்; தாய் சிறுத்தையை தேடுகின்றனர்.