sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

நகைகள், வாலிபருடன் மாயமான இளம்பெண் நெல்லையில் மீட்பு

/

நகைகள், வாலிபருடன் மாயமான இளம்பெண் நெல்லையில் மீட்பு

நகைகள், வாலிபருடன் மாயமான இளம்பெண் நெல்லையில் மீட்பு

நகைகள், வாலிபருடன் மாயமான இளம்பெண் நெல்லையில் மீட்பு


ADDED : செப் 20, 2024 11:48 PM

Google News

ADDED : செப் 20, 2024 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர் தம்பதியின் வீட்டு வேலைக்காக, தனியார் நிறுவனம் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த, 29 வயது பெண், சமீபத்தில் தேர்வானார்.

அவர் பணியில் காட்டிய முனைப்பும், அர்ப்பணிப்பும் டாக்டர் தம்பதியை கவர்ந்தது. இதனால் இளம்பெண்ணுக்கு அதிக சம்பளம் கொடுத்தனர்.

டாக்டர் தம்பதியின், 19 வயது மகன் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் இருந்தார். அவருக்கும், அந்த பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில் டாக்டர் தம்பதியின் மகன் மற்றும் 50 சவரன் நகைகளுடன் இளம்பெண் மாயமானார்.

போலீசாரின் விசாரணையில், பல மாநிலங்களுக்கு இருவரும் சென்றது தெரிந்தது. திருநெல்வேலி வந்த அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர்.

டாக்டர் தம்பதி கேட்டதால், வழக்கு பதியாமல் இளம்பெண்ணை எச்சரித்து அனுப்பிய போலீசார், மகனை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

அந்த பெண், இதுபோல நான்கு பேரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளது, போலீஸ் விசாரணையில் தெரிந்தது.






      Dinamalar
      Follow us