sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

போலி அனுமதி சீட்டு அச்சடித்த அச்சக உரிமையாளர் கைது

/

போலி அனுமதி சீட்டு அச்சடித்த அச்சக உரிமையாளர் கைது

போலி அனுமதி சீட்டு அச்சடித்த அச்சக உரிமையாளர் கைது

போலி அனுமதி சீட்டு அச்சடித்த அச்சக உரிமையாளர் கைது


ADDED : அக் 22, 2024 11:12 PM

Google News

ADDED : அக் 22, 2024 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்:திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மண் உள்ளிட்ட கனிம வளங்கள் அதிக அளவில் கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன.

இதற்காக, கனிமவளத் துறையில் இருந்து குறைவான எண்ணிக்கையில் அனுமதிச்சீட்டு பெற்று விட்டு, அதை போலியாக தயாரித்து, அதிக அளவில் கனிம வளங்களை கடத்தி வந்தது தெரிய வந்து உள்ளது.

நாகர்கோவில் அப்பா மார்க்கெட் அருகே, கோட்டார் போலீசார் நடத்திய வாகன சோதனையில் சிக்கிய நான்கு லாரிகளில், போலி அனுமதி சீட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாரின் விசாரணையில், தக்கலை அருகே வேர்கிளம்பி மார்க்கெட் பகுதியில், ஒரு அச்சகத்தில் போலி அனுமதி சீட்டு அச்சடிக்கப்படுவது தெரிந்தது.

இதை தொடர்ந்து, திருவிதாங்கோடு சாமி தட்டு விளையைச் சேர்ந்த அச்சக உரிமையாளர் செந்தில்குமார், 34, நேற்று கைது செய்யப்பட்டார்.

இங்கிருந்து, போலி அனுமதி சீட்டுகளும், போலி முத்திரை கொண்ட ரப்பர் ஸ்டாம்புகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர் அளித்த தகவலின்படி, மார்த்தாண்டம் வெட்டுமணி கூலி தொழிலாளி ஆகாஷ்குமார், 23, கனிமவள லாரி டிரைவர் ரமேஷ்குமார், 44, திற்பரப்பு ராஜேஷ், 24, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதை தொடர்ந்து, கனிம வளக் கொள்ளையில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை, 11 ஆக உயர்ந்து உள்ளது.






      Dinamalar
      Follow us