/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரயில்வே குகை வழியில் புதிய தொழில் நுட்பம்: கரூர் எம்.பி.,
/
ரயில்வே குகை வழியில் புதிய தொழில் நுட்பம்: கரூர் எம்.பி.,
ரயில்வே குகை வழியில் புதிய தொழில் நுட்பம்: கரூர் எம்.பி.,
ரயில்வே குகை வழியில் புதிய தொழில் நுட்பம்: கரூர் எம்.பி.,
ADDED : ஆக 20, 2024 02:56 AM
கரூர்: ஏமூர் ரயில்வே குகை வழிப்பாதை பணியில், புதிய தொழில்நுட்பம் நடப்பதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என, கரூர் எம்.பி., ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர்அருகில், ஏமூர்ரயில்வே குகை வழிப்பாதை பணிகள்குறித்து பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் வைத்தனர். அதன்படி, ரயில்வே உயர்அதிகாரிகளை அழைத்து பேசினேன். ரயில்வே குகை வழிப்பாதை கட்டுமான பணியில், பாறைகளை வெடிவைத்து தகர்க்கும்போது, அருகாமையில்உள்ள வீடுகளில், விரிசல்கள்ஏற்பட்டது. பாறைகளை வெடிவைத்து தகர்ப்பதற்கு மாற்றாக, கோவையில்உள்ள கட்டுமானதொழில்நுட்ப வல்லுனர்களோடு கலந்து பேசி, புதிய தொழில்நுட்பத்தில் பணிகள்நடக்கிறது. எனவே, பொதுமக்கள்பயன்பாட்டிற்கு விரைவில்பாதை திறக்கப்படும்என உத்திரவாதத்தை ரயில்வே நிர்வாகம்அளித்துள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

