sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கருப்பத்துாரில் பங்குனி மாததிருத்தேரில் சுவாமி பவனி

/

கருப்பத்துாரில் பங்குனி மாததிருத்தேரில் சுவாமி பவனி

கருப்பத்துாரில் பங்குனி மாததிருத்தேரில் சுவாமி பவனி

கருப்பத்துாரில் பங்குனி மாததிருத்தேரில் சுவாமி பவனி


ADDED : ஏப் 11, 2025 01:21 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருப்பத்துாரில் பங்குனி மாததிருத்தேரில் சுவாமி பவனி

கிருஷ்ணராயபுரம்:கருப்பத்துார், சிம்மபுரீஸ்வரர் சிவன் கோவிலில், பங்குனி மாத உத்திர திருவிழாவை முன்னிட்டு, சிவன், அம்மன் திருத்தேரில் பவனி வரும் சிறப்பு வழிபாடு நடந்தது.

கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில், கருப்பத்துாரில் சிம்மபுரீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாத உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு திருவிழாவை முன்னிட்டு, சுவாமி திருத்தேரில் பவனி வரும் சிறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. சிவன் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தேரில் வைத்து பூஜை செய்யப்பட்டது.

இதையடுத்து தேரை பக்தர்கள் வடம் பிடித்தனர். கோவிலை சுற்றி திருவீதி உலாவாக பவனி வந்து கோவிலில் தேர் நிலை நிறுத்தப்பட்டது. கருப்பத்துார், லாலாப் பேட்டை, கள்ளப்பள்ளி, பிள்ளபாளையம், கொம்பாடிப்பட்டி, வல்லம், திம்மாச்சிபுரம், கே.பேட்டை, குளித்தலை பகுதிகளை சேர்ந்தவ ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us