sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

10 லட்சம் பனை விதைகள் நட திட்டம் கரூர் கலெக்டர் தகவல்

/

10 லட்சம் பனை விதைகள் நட திட்டம் கரூர் கலெக்டர் தகவல்

10 லட்சம் பனை விதைகள் நட திட்டம் கரூர் கலெக்டர் தகவல்

10 லட்சம் பனை விதைகள் நட திட்டம் கரூர் கலெக்டர் தகவல்


ADDED : செப் 02, 2024 03:03 AM

Google News

ADDED : செப் 02, 2024 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : காவிரி கரையோர பகுதிகளில் பனை விதைகள் நடும் பணி திட்-டத்தில், கரூர் மாவட்டத்தில், 10 லட்சம் பனை விதைகள் நடப்-படும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.கரூர் மாவட்டம், கடவூர் வட்டம் பாலவிடுதி பஞ்.,க்குட்பட்ட குரும்பப்பட்டியில் பனை விதைகள் சேகரிக்கும் பணியை கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது:பனை மரங்கள் அழியாமல் பாதுகாக்கும் வகையில், காவிரிக்க-ரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி செப்., 8 முதல் நடக்க இருக்கிறது. ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர்,

திருச்சி, தஞ்சாவூர், மயிலாடு-துறை உள்ளிட்ட, எட்டு மாவட்டங்களில் காவிரிக்கரையின் இரு பக்கங்களிலும், 416 கிலோ மீட்டர் தொலைவிற்கு விதைகள் நடப்படுகிறது. இதில், பங்கேற்க இருக்கும் மாணவ, மாண-வியர்,

சமூகசேவகர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொண்டு நிறு-வனங்கள், அரசு, தனியார் நிறுவனங்கள், udhavi.app/panai என்ற இணையதளம் மூலம் பதிவுசெய்து கொள்ளுமாறும் கேட்டுக்-கொள்ளப்படுகிறது. ஒரு கோடி

பனைவிதைகள் நடும் பணியில் பங்கேற்பவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்-படும். கரூர் மாவட்டத்தில், 10 லட்சம் பனை விதைகள் நடவு-செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு ஒருங்கி-ணைப்பாளர் ராஜவேலு, கரூர் விதைகள் அரக்கட்டளை சந்துரு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்

முத்துக்குமார் உள்பட பலர் பங்-கேற்றனர்.






      Dinamalar
      Follow us