/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.13.57 லட்சம் மதிப்புள்ள வேளாண் பொருட்கள் ஏலம்
/
ரூ.13.57 லட்சம் மதிப்புள்ள வேளாண் பொருட்கள் ஏலம்
ADDED : மார் 04, 2025 06:09 AM
கரூர்: சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 13 லட்சத்து, 57 ஆயிரத்து, 670 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
கரூர் மாவட்டம், நொய்யல் அருகில் சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. சுற்று வட்-டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 2,503 தேங்காய்களை விற்-பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்த பட்சமாக, 44 ரூபாய், அதிகபட்சமாக, 55.55 ரூபாய், சராசரியாக, 48.05 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 802 கிலோ எடையுள்ள தேங்காய்கள், 37 ஆயிரத்து, 631 ரூபாய்க்கு விற்பனையானது.
கொப்பரை தேங்காய், முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 143.69 ரூபாய், அதிகபட்சமாக, 147.19 ரூபாய், சராசரியாக, 146.59 ரூபாய், இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 102.49 ரூபாய், அதிகபட்சமாக, 145.60 ரூபாய், சராசரியாக, 134.42 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தமாக, 4,422 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு, 6 லட்-சத்து, 19 ஆயிரத்து 526 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.எள் கருப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 156 ரூபாய், அதிகபட்சமாக, 180.99 ரூபாய், சராசரியாக, 173 ரூபாய், சிவப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 123.19 ரூபாய், அதிக பட்ச-மாக, 140.49 ரூபாய், சராசரியாக, 137.49 ரூபாய், வெள்ளை ரகம் ஒரு கிலோ அதிகபட்சமாக, 119.02 ரூபாய், சராசரியாக, 116.16 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 4,350 கிலோ எடையுள்ள எள், 7 லட்சத்து, 513 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தமாக தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 13 லட்சத்து, 57 ஆயிரத்து, 670 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.