/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.30.58 லட்சம் மதிப்புள்ள வேளாண் பொருட்கள் ஏலம்
/
ரூ.30.58 லட்சம் மதிப்புள்ள வேளாண் பொருட்கள் ஏலம்
ADDED : ஆக 01, 2024 07:27 AM
கரூர்: நொய்யல் அருகேயுள்ள, சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ரூ.30.58 லட்சம் மதிப்புள்ள வேளாண் பொருட்கள் விற்பனை நடந்தது.
சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 11,900 தேங்-காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்த-பட்சமாக, 22.49 ரூபாய், அதிகபட்சமாக, 28.49 ரூபாய், சராசரி-யாக, 26.16 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 3,873 கிலோ எடையுள்ள தேங்காய், 99 ஆயிரத்து, 49 ரூபாய்க்கு விற்பனையா-னது.
கொப்பரை தேங்காய் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 93.99 ரூபாய், அதிகபடசமாக, 95.69 ரூபாய், சராசரியாக, 94.99 ரூபாய், இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 62.91 ரூபாய், அதிக-பட்சமாக, 94.39 ரூபாய், சராசரியாக, 85.39 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தமாக, 28 லட்சத்து, 48 ஆயிரத்து, 443 ரூபாய்க்கு விற்பனை நடந்தது. கருப்பு ரகம் எள் ஒரு கிலோ ஒரே விலையாக, 143 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 1,066 கிலோ எடையுள்ள எள், ஒரு லட்சத்து, 10 ஆயிரத்து, 902 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தமாக தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 30 லட்சத்து, 58 ஆயிரத்து, 394 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.