/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சமத்துவபுரத்திலிருந்து பஸ் இயக்க மக்கள் கோரிக்கை
/
சமத்துவபுரத்திலிருந்து பஸ் இயக்க மக்கள் கோரிக்கை
ADDED : மார் 04, 2025 06:11 AM
கரூர்: புலியூர் சமத்துவபுரத்திலிருந்து, கரூருக்கு பஸ் இயக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் அருகில் புலியூர் டவுன் பஞ்., 4வது வார்டில் உள்ள சமத்து-வபுரத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்-றனர். இப்பகுதியில் வசிப்பவர்களில், பெரும்பாலானோர் கரூர் நகரில் செயல்படும் ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், பஸ் பாடி, கொசு வலை உற்பத்தி நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள் ஆகியவற்றில் கூலித்தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்-றனர். அதிகாலை, 4:00 முதல், 5.00 மணிக்குள் வேலைக்கு செல்-கின்றனர். சமத்துவபுரத்தில் இருந்து பஸ் இல்லாததால், 2.5 கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்று புலியூர் பஸ் ஸ்டாப் வந்து பஸ் ஏறி செல்ல வேண்டி உள்ளது.
எனவே, புலியூர் சமத்துவபுரத்திலிருந்து கரூருக்கு பஸ் இயக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்-பார்க்கின்றனர்.