sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பாலவிடுதியில் மறியல் 27 பேர் மீது வழக்குப்பதிவு

/

பாலவிடுதியில் மறியல் 27 பேர் மீது வழக்குப்பதிவு

பாலவிடுதியில் மறியல் 27 பேர் மீது வழக்குப்பதிவு

பாலவிடுதியில் மறியல் 27 பேர் மீது வழக்குப்பதிவு


ADDED : மே 01, 2024 02:13 AM

Google News

ADDED : மே 01, 2024 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை:குளித்தலை அடுத்த மாவத்துார் அரசு குளத்தில், நேற்று முன்தினம், டாரஸ் டிப்பர் லாரியில் செம்மண், வண்டல் மண் கடத்தி சென்றனர். தகவலறிந்த யூனியன் கவுன்சிலர் ராமமூர்த்தி, மாவத்துார் பஞ்., தலைவர் செந்தில் மோகன் மற்றும் பொதுமக்கள் வாகனங்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் பிடித்து கொடுத்த வாகனங்களை போலீசார் விடுவித்தனர்.

இதையறிந்த யூனியன் கவுன்சிலர் ராமமூர்த்தி, பஞ்., தலைவர் செந்தில் மோகன் மற்றும் கிராம மக்கள், நேற்று முன்தினம் இரவு பாலவிடுதி போலீஸ் ஸ்டேஷன் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் எச்சரிக்கை விடுத்தும் கலைந்து செல்லாததால், போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக, யூனியன் கவுன்சிலர் ராமமூர்த்தி, பஞ்., தலைவர் செந்தில் மோகன் உள்பட, 25 பேர் மீது பாலவிடுதி போலீசார் வழக்குப்

பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us