/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் பரமேஸ்வரி அம்மன் தரிசனம்
/
சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் பரமேஸ்வரி அம்மன் தரிசனம்
சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் பரமேஸ்வரி அம்மன் தரிசனம்
சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் பரமேஸ்வரி அம்மன் தரிசனம்
ADDED : செப் 03, 2024 03:40 AM
கரூர்: புன்னம் சத்திரம், கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஆவணி மாத அமாவாசையையொட்டி, சிறப்பு அலங்காரம் நேற்று நடந்தது.
கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி கோவிலில், ஆவணி மாத அமாவாசையையொட்டி, மூலவர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திரு மஞ்சனம் உள்ளிட்ட, வாசனை திரவியங்கள் மூலம் அபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு பூக்கள் அலங்காரத்தில், மூலவர் அங்காளபரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்-தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.அதேபோல், தலையூர் மாரியம்மன் கோவில், புகழூர் மாரியம்மன் கோவில், பொன்னாச்சி அம்மன் கோவில், திருகாடுதுறை மாதேஸ்வரி அம்பிக்கை கோவில், மாரியம்மன் கோவில், தோட்-டக்குறிச்சி மலையம்மன் கோவில், நொய்யல் செல்லாண்டி-யம்மன் கோவில்களிலும், ஆவணி மாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.