/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பூச்சி தாக்குதலால் முருங்கை வரத்து குறைந்தது
/
பூச்சி தாக்குதலால் முருங்கை வரத்து குறைந்தது
ADDED : ஆக 09, 2024 02:56 AM
அரவக்குறிச்சி: பூச்சி தாக்குதலால், முருங்கை வரத்து குறைந்துள்ளது.
அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிரா-மங்களில், 30 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் முருங்கை பயிரிடப்பட்-டுள்ளது. இந்நிலையில், முருங்கை மரங்களை சுற்றி பூச்சிகள் தாக்குதல் காரணமாக பூக்கள் மற்றும் இலைகள் உதிர்ந்து முருங்கை விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் மொத்த விற்-பனை சந்தைக்கு முருங்கை வரத்தும்
குறைந்துள்ளது.
சந்தைக்கு வரும் முருங்கை காய்களும் பழுத்து, பழுப்பு நிறத்தில் இருப்பதால் முருங்கைக்கு உரிய விலை கிடைப்ப-தில்லை. தற்போது முருங்கை கிலோ, 40 ரூபாய் முதல் விற்ப-னையாகிறது. சில்லறை விற்பனையில் ஒரு முருங்கைக்காய், ஐந்து ரூபாய்க்கு விற்பனையாகிறது. முருங்கை வரத்து குறைந்-துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.