sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நிலம் அபகரிப்பு புகாரில் மேலும் ஒருவர் கைது

/

நிலம் அபகரிப்பு புகாரில் மேலும் ஒருவர் கைது

நிலம் அபகரிப்பு புகாரில் மேலும் ஒருவர் கைது

நிலம் அபகரிப்பு புகாரில் மேலும் ஒருவர் கைது


ADDED : செப் 05, 2024 02:39 AM

Google News

ADDED : செப் 05, 2024 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே நடந்த, நிலம் அபகரிப்பு புகார் தொடர்பாக மேலும் ஒருவரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்-தவர் பிரகாஷ், 50, தொழில் அதிபர். இவரது மகள் ேஷாபனா பெயரில், கரூர் அருகே குன்னம்பட்டி, தோரணகல்பட்டியில் உள்ள, 22 ஏக்கர் நிலம் உள்ளது. அதை யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூர் அ.தி.மு.க., துணை செயலாளர் செல்வராஜ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் ஆகியோர் போலியான ஆவணங்கள் தயாரித்து, கிரையம் செய்து கொண்டதாக, கரூர் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் கடந்த ஜூன், 9ல் கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்த வழக்கில் கடந்த ஜூலை, 17ல் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர், பிரவீன், வில்லிவாக்கம் முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரித்திவிராஜ் ஆகியோரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். தற்போது மூன்று பேருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இதைய-டுத்து கடந்த, 2ல் நிலம் அபகரிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தம்பி சேகர், புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூர் அ.தி.மு.க., துணை செயலாளர் செல்வராஜ் ஆகியோரை கைது செய்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு கரூர் அருகே கோவை சாலையில், நிலம் அபகரிப்பு புகாரில் தொடர்புடைய யுவராஜ் என்பவரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us