/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலைகளில் உள்ள குடிநீர் தொட்டி பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை
/
சாலைகளில் உள்ள குடிநீர் தொட்டி பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை
சாலைகளில் உள்ள குடிநீர் தொட்டி பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை
சாலைகளில் உள்ள குடிநீர் தொட்டி பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை
ADDED : மே 17, 2024 01:53 AM
கரூர்: திருச்சி, மதுரை மற்றும் சேலம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள குடிநீர் தொட்டிகளை பராமரித்து, நாள்தோறும் தண்ணீர் நிரப்ப வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தென் மாவட்ட மக்களின் நுழைவு வாயிலாக உள்ள கரூர் நகரை சுற்றி, திருச்சி, மதுரை மற்றும் சேலம் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இதன் வழியாக செல்லும் பொதுமக்கள் வசதிக்காக, கறுப்பு நிற சின்டெக்ஸ் தொட்டிகள் வைக்கப்பட்டு, நாள்தோறும் தண்ணீர் நிரப்பப்பட்டன. ஆனால், நாளடைவில் தண்ணீர் தொட்டிகளை பராமரிப்பு செய்யாமல் நெடுஞ்சாலை துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் அலுவலர்கள் தவறி விட்டனர். இதனால், தண்ணீர் தொட்டிகள் சேதமடைந்து விட்டன. சில பகுதிகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீரும் நிரப்பப்படுவது இல்லை. இதனால், தண்ணீர் தொட்டிகள் பயனற்ற நிலையில் உள்ளன. எனவே, குடிநீர் தொட்டிகளை சீரமைத்து, நாள்தோறும் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

