/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன திட்டத்தில் மானியம் வழங்கல்
/
விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன திட்டத்தில் மானியம் வழங்கல்
விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன திட்டத்தில் மானியம் வழங்கல்
விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன திட்டத்தில் மானியம் வழங்கல்
ADDED : ஆக 02, 2024 01:49 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம், வேளாண்மைத்துறை சார்பில் நுண்ணீர் பாசனத்திட்டம் மூலம், விவசாயிகள் குறைந்த நீர் கொண்டு விவசாய பணிகளில் ஈடுபடும் வகையில், திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆண்டில், 800 ஹெக்டேருக்கு, 532.03 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பயிர்களுக்கும், சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்துவதால் நீர் சிக்கனமாக செலவாகும்.
ஒரு ஏக்கர் பாசனத்திற்கு பயன்படுத்தும் தண்ணீரை, மூன்று ஏக்கர் நிலத்திற்கு பயன்படுத்தலாம். சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தும் போது, தண்ணீர் பாய்ச்சுவதற்கான ஆட்கள் குறைக்கப்படுகிறது. பயிர் வேரின் அருகில் மட்டும் நீர் பாய்ச்சுவதால், பயிர் இல்லாத இடத்தில் களை வளராது. இதனால் களை எடுக்கும் செலவு குறைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சிறு குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதம் மானியம், பெரிய விவசாயிகளுக்கு, 75 சதவீதம் மானியத்தில் சொட்டுநீர் கருவிகள் வழங்கப்படுகிறது.
சொட்டு நீர் பாசனம் அமைக்க குறைந்தபட்சம் அரை ஏக்கர் நிலமும், தெளிப்பு நீர் பாசனம் அமைக்க ஒரு ஏக்கர் நிலமும் இருக்க வேண்டும். இதற்கான தேவையான ஆவணங்கள் கம்ப்யூட்டர் சிட்டா, அடங்கல் சிறு, குறு விவசாயி சான்று, குடும்ப அட்டை நகல், புகைப்படம் ஆகியவை தேவைப்படுகிறது. இந்த திட்டம் குறித்து தகவல் பெற, தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை விவசாயிகள் அணுகலாம்.
இத்தகவலை. கரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.