sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

/

கரூரில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

கரூரில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

கரூரில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?


ADDED : ஆக 02, 2024 12:18 AM

Google News

ADDED : ஆக 02, 2024 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூரில், தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, அனைத்து பகுதிகளிலும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த கோவை சாலை, ஈரோடு சாலை, திண்டுக்கல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இரவு, பகலாக சுற்றித் திரிகின்றன. பொதுமக்கள், கால்நடைகளை கடித்தும் வருகின்றன. சாலைகளில் உள்ள தடுப்புச்சுவரின் இடைவெளி வழியாக, திடீரென குறுக்கே ஓடும் நாய்களால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

இது குறித்து மாநகராட்சி, அ.தி.மு.க., கவுன்சிலர் சுரேஷ் கூறியதாவது:

தெரு நாய்களை பிடித்து, கருத்தடை செய்யும் உரிமை மாநகராட்சிக்குத்தான் உள்ளது. வாங்கல் சாலையில் உள்ள, நாய்கள் கருத்தடை மையம் செயல்படுகிறதா என சந்தேகம் உள்ளது. மாநகராட்சியில் கடந்த சில மாதங்களாக நாய்களை பிடிக்கவே இல்லை. அவற்றின் எண்ணிக்கை பல மடங்கு பெருகிவிட்டது. முன்பெல்லாம் நாய்களை பிடித்து கருத்தடை செய்தனர். இப்போது மாநகராட்சியில் அந்த நடைமுறையே இல்லை.

கடந்த மாதம், காந்தி கிராமத்தில் உள்ள ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்த தெரு நாய்கள், நான்கு ஆடுகளை கடித்து கொன்றன. காலையில் நடைபயிற்சி செய்வோரையும் தெருநாய்கள் விட்டு வைப்பதில்லை. ஓராண்டுக்கு மேலாக, நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய டெண்டர் விடப்படவில்லை. மாநகராட்சி அலட்சியத்தால்தான், தெரு நாய்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இனியாவது நாய்களை கட்டுப்படுத்த, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us