ADDED : டிச 29, 2025 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கரூர் அபய-பிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், திரு-மொழி திருநாள் எனப்படும் பகல் பத்து உற்சவம் நடக்கிறது.
இதில், பகல் பத்து உற்சவம், 8ம் நாளை முன்-னிட்டு, நேற்று சுவாமிக்கு பல்வேறு பொருட்-களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், முத்-தங்கி அலங்காரத்தில் காட்சியளித்தார். சுவாமி கோவில் வலம் வந்த பிறகு, மீண்டும் கோவில் மண்டபத்தில் சுவாமிக்கு தீபாராதனை காட்டப்-பட்டது. இன்று மோகினியார் அலங்காரம், நாச்சியார் திருக்கோலம் நடக்கிறது. நாளை அதிகாலை, 4:00 மணிக்கு மேல், 4:30 மணிக்குள் வைகுண்ட ஏகா-தசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி
நடக்கிறது.

