sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சுக்காலியூர் ரவுண்டானா பாலத்தின் கீழ் பகுதியில் உடைந்த போர்டு

/

சுக்காலியூர் ரவுண்டானா பாலத்தின் கீழ் பகுதியில் உடைந்த போர்டு

சுக்காலியூர் ரவுண்டானா பாலத்தின் கீழ் பகுதியில் உடைந்த போர்டு

சுக்காலியூர் ரவுண்டானா பாலத்தின் கீழ் பகுதியில் உடைந்த போர்டு


ADDED : ஏப் 19, 2024 06:41 AM

Google News

ADDED : ஏப் 19, 2024 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூர் அருகே, சுக்காலியூர் ரவுண்டானா பகுதியில் உள்ள, பாலத்தின் கீழ் பகுதியில் எச்சரிக்கை போர்டுகள் உடைந்த நிலையில் உள்ளது. சாலையும், பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

கரூர் மாவட்டம், சுக்காலியூர் பகுதியில் திருச்சி, சேலம் மற்றும் மதுரை தேசிய நெடுஞ்சாலைகள் இணைகிறது. இதனால், அப்பகுதியில் வாகனங்கள் சரிவர செல்லும் வகையில், ரவுண்டானா மற்றும் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், உயர்மட்ட பாலத்தின் கீழ் பகுதிகளில், சாலைகள் பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. எச்சரிக்கை போர்டுகள் உடைந்துள்ளது.

இதனால், திருச்சியில் இருந்து சேலம் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகளும், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, திருச்சி செல்லும் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். மேலும், அப் பகுதியில் போதிய விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில் டூவீலர்களில் செல்பவர்களும், சாலையில் உள்ள குழிகளில் தவறி விழுகின்றனர். எனவே திருச்சி, மதுரை, சேலம் ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடமான, சுக்காலியூர் ரவுண்டானாவின் உயர்மட்ட பாலத்தின் கீழ் பகுதிகளில் உள்ள, குண்டும், குழியுமான சாலைகளை சீரமைத்து, சேதமடைந்துள்ள எச்சரிக்கை போர்டுகளை புதிதாக வைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us