/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பைக் மீது லாரி மோதிகல்லுாரி மாணவர் பலி
/
பைக் மீது லாரி மோதிகல்லுாரி மாணவர் பலி
ADDED : டிச 18, 2024 01:50 AM
கரூர், :கரூர் அருகே, பைக் மீது லாரி மோதிய விபத்தில், பொறியியல் கல்லுாரி மாணவர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், நெரூர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் சேது, 22; கரூர் தளவாப்பாளையத்தில் உள்ள, தனியார் பொறியியல் கல்லுாரியில் பிசிக்கல் சயின்ஸ், இரண்டாமாண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை, சகோதரன் ஸ்ரீதரன், 21; என்பவருடன், வாங்கல் சாலையில் பஜாஜ் பைக்கில் சென்று கொண்டிருந்தார். பைக்கை சேது
ஓட்டியுள்ளார்.அப்போது, அந்த வழியாக தஞ்சாவூரை சேர்ந்த அமல்தாஸ், 33; என்பவர் ஓட்டி சென்ற லாரி, பைக் மீது மோதியது. அதில், கீழே விழுந்த சேது, அதே இடத்தில் உயிரிழந்தார். ஸ்ரீதரனுக்கு காயம் ஏற்பட்டது. வாங்கல் போலீசார்
விசாரிக்கின்றனர்.