sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாலிபர் கொலை வழக்கு பெயின்டருக்கு குண்டாஸ்

/

வாலிபர் கொலை வழக்கு பெயின்டருக்கு குண்டாஸ்

வாலிபர் கொலை வழக்கு பெயின்டருக்கு குண்டாஸ்

வாலிபர் கொலை வழக்கு பெயின்டருக்கு குண்டாஸ்


ADDED : அக் 10, 2024 01:53 AM

Google News

ADDED : அக் 10, 2024 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலிபர் கொலை வழக்கு

பெயின்டருக்கு குண்டாஸ்

கரூர், அக். 10-

கரூர் அருகே, வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த பெயின்டர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அரவக்குறிச்சி அருகே நஞ்சக்காளக்குறிச்சி பகுதியை சேர்ந்த, கந்தசாமி என்பவரது மகன் கபில்தேவ், 23; பி.ஏ., வரை படித்துள்ளார். ஐ.டி., கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது குடும்பத்துக்கும், கரூர் ராயனுார் பகுதியை சேர்ந்த பெயின்டர் வீரமலை, 32, என்பவருக்கும் இடையே, முன் விரோதம் உள்ளது.

இந்நிலையில் கடந்த செப்., 4ல் கரூர் அருகே திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில் நின்று கொண்டிருந்த கபில்தேவை, பெயின்டர் வீரமலை கத்தியால் குத்தி கொலை செய்தார். தற்போது, வீரமலை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், வீரமலையை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, கலெக்டர்

தங்கவேலுவுக்கு பரிந்துரை செய்தார். அதன்படி, வீரமலையை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, கலெக்டர் தங்கவேல் உத்தரவிட்டார்.

இதையடுத்து, திருச்சி மத்தியில் சிறையில் உள்ள வீரமலையிடம், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகலை, பசுபதிபாளையம் போலீசார் நேற்று வழங்கினர்.






      Dinamalar
      Follow us