ADDED : பிப் 17, 2024 01:46 PM
அ நிறம் | அளவு
கரூர்: கரூர் அருகே உள்ள திருமாநிலையூர் வழியாக திருச்சி உள்ளிட்ட, பல மாவட்டங்களுக்கு பஸ், லாரி, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் செல்கிறது.
ஆனால், அப்பகுதியில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் காணப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் வாகனங்களில் எளிதாக செல்ல முடியவில்லை. விபத்துகள் ஏற்படுகிறது. பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற தயக்கம் காட்டுகின்றனர். விபத்துகளை தவிர்க்கும் வகையில், போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில், திருமாநிலை யூரில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
