/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் ரயில்வே ஸ்டேஷனில் இறுதி கட்டத்தில் அம்ருத் பாரத் பணி
/
கரூர் ரயில்வே ஸ்டேஷனில் இறுதி கட்டத்தில் அம்ருத் பாரத் பணி
கரூர் ரயில்வே ஸ்டேஷனில் இறுதி கட்டத்தில் அம்ருத் பாரத் பணி
கரூர் ரயில்வே ஸ்டேஷனில் இறுதி கட்டத்தில் அம்ருத் பாரத் பணி
ADDED : ஆக 14, 2025 02:14 AM
கரூர், கரூர் ரயில்வே ஸ்டேஷனில், அம்ருத் பாரத் திட்டப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.கடந்த, 2023 ஆகஸ்டில் நாடு முழுவதும், 508 ரயில்வே ஸ்டேஷன்களில், அம்ருத் பாரத் என்ற திட்டத்தின் கீழ், விரிவாக்கம் செய்யும் பணிகளை, பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அதில், கரூர் ரயில்வே ஸ்டேஷனில், 34 கோடி ரூபாய் செலவில், விரிவாக்க பணிகள் தொடங்கின. நகரும் படிக்கட்டுகள், கார் பார்க்கிங், புதிய கழிப்பிட வசதி, ரயில்வே ஸ்டேஷன் முகப்பு மாற்றம், கேன்டீன், பிளாட்பாரங்களில் இருக்கை வசதி உள்ளிட்ட பணிகள் திட்டமிடப்பட்டது.கரூர் ரயில்வே ஸ்டேஷனில், செப்., மாதத்துக்குள், விரிவாக்க பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், கரூர் ரயில்வே ஸ்டேஷனில், அம்ருத் பாரத் இறுதி கட்ட திட்டப்பணிகளை, 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள், இரவு பகலாக மேற்கொண்டு வருகின்றனர்.ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயில் முதல், பிளாட்பாரம் நுழைவு வாயில் வரை புதிய முகப்பு பணிகள், தார்ச்சாலை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.