/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட விழிப்புணர்வு
/
தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட விழிப்புணர்வு
ADDED : அக் 19, 2025 02:31 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி தீயணைப்புத்துறை சார்பில், தீ விபத்தில்லா தீபா-வளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடுவது குறித்து, பள்-ளப்பட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்த பொதுமக்களிடையே விழிப்-புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தீயணைப்பு துறை நிலைய அலு-வலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தீயணைப்பு நிலைய வீரர்கள் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். அப்-போது அவர்கள் கூறியதாவது:தீ விபத்தில்லாமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில், பாதுகாப்பான முறையில் பட்டாசுளை வெடிக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள நேரத்தில் மட்டுமே, பட்டாசு-களை வெடிக்க வேண்டும். குழந்தைகள் சட்டை பையில் பட்-டாசு வைக்க பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது. பட்டாசுகளை கடையிலிருந்து வாங்கி, பாதுகாப்பாக வீட்டுக்கு எடுத்து செல்ல வேண்டும். சமையல் அறைக்கு அருகில் பட்டாசுகளை வைக்கக் கூடாது. பெரியவர்கள் மேற்பார்வையில் மட்டுமே, குழந்தை-களை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும். வெடிக்காத பட்-டாசுகளை கைகளில் தொடவோ, காலால் மிதிக்கவோ கூடாது. விபத்தில்லா தீபாவளியை கொண்டாட விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.