ADDED : அக் 19, 2025 02:32 AM
கரூர்: கரூர் ஜவஹர் பஜாரில், விதிகளை மீறி அமைக்கப்பட்ட தரைக்-கடைகள் அகற்றப்பட்டன.
கரூரில் முக்கிய வீதிகளில், ஆண்டுதோறும் தீபாவளி பண்டி-கையின் போது, வெளியூர்களை சேர்ந்த ஜவுளி வியாபாரிகள் இங்கு வந்து, நான்கு நாட்களுக்கு முன்னதாகவே, தற்காலிக தரைக்கடைகள் அமைத்து வியாபாரம் செய்வது வழக்கம். ஆனால், ஜவகர் பஜாரில் தரைக்கடைகள் அமைப்பதால் போக்கு-வரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, மாநகராட்சி பகுதியில் ஜவகர் பஜாரை தவிர பிற பகுதி-களில், போக்குவரத்து இடையூறு இல்லாமல், தரைக்கடைகள் அமைத்து கொள்ளலாம், சுங்க கட்டணம் இல்லாமல் தரைக்க-டைகள் அமைக்கலாம் என, மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இருந்தபோதும், ஜவகர் பஜாரில் தரைக்-கடைகள் அமைக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து, தற்காலிக தரைக்கடைகளை அகற்றக்கோரி போலீசார் அறிவுறுத்தினர். பின்னர் அங்கிருந்து கடைகளை அப்பு-றப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அனுமதிக்கப்பட்ட இடங்-களில் தரைக்கடைகளை அமைத்து கொள்ளலாம் என, போலீசார் தெரிவித்தனர்.