ADDED : ஆக 25, 2025 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, கருப்-பத்துார், கள்ளப்பள்ளி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார் ஆகிய பகுதிகளில், விவசாயிகள் அதிகளவில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.
விளைந்த வாழைத்தார்களை அறுவடை செய்து, லாலாப்-பேட்டை வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டிகளில் கொண்டு-வந்து விற்பனை செய்யப்படுகிறது. இதில் பூவன் வாழைத்தார் ஒன்று, 350 ரூபாய், ரஸ்தாளி வாழைத்தார், 400 ரூபாய், கற்பூர-வள்ளி, 250 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த நாட்கள் தொடர்ந்து வருவதால், உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் திரண்டு வாழைத்-தார்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.