sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மணல் குவாரிகளை விரைவில் திறக்க கோரி மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் மனு

/

மணல் குவாரிகளை விரைவில் திறக்க கோரி மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் மனு

மணல் குவாரிகளை விரைவில் திறக்க கோரி மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் மனு

மணல் குவாரிகளை விரைவில் திறக்க கோரி மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் மனு


ADDED : ஜன 28, 2025 07:09 AM

Google News

ADDED : ஜன 28, 2025 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: மணல் குவாரிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சி.ஐ.டி.யு., மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில், கரூர் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள ஆற்றில் இருந்து, உள்ளூர் பயன்பாட்டுக்கு மணல் அள்ள, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அமலாக்கத்துறை ரெய்டு காரணமாக, மணல் குவாரிகள் மூடப்பட்டு விட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

வருமானம் இல்லாமல் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். மாடுகளின் பராமரிப்பு செலவும் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் குளித்தலை, கிருஷ்ணராயபுரம் பகுதியில் மணல் குவாரி திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே செயல்பட்டு வந்த நன்னியூர், மல்லம்பாளையம் ஆகிய இடங்களில் குவாரிகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us