/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மகனுக்கு மிரட்டல் பெற்றோர் மீது வழக்கு
/
மகனுக்கு மிரட்டல் பெற்றோர் மீது வழக்கு
ADDED : டிச 29, 2025 07:28 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த தோகைமலை பஞ்., திரு-மாணிக்கம்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 45; விவசாய கூலித்தொழிலாளி. இவரது தந்தை முருகன், 60, தாய் பழனியம்மாள், 55. இவர்க-ளுக்கு இடையே நிலப்பிரச்னை இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த, 26ல் ராஜேந்திரன் வீட்டில் இருந்தபோது, அவரது பெற்றோர் தகாத வார்த்-தையில் பேசி, அடித்து கொலை மிரட்டல் விடுத்-துள்ளனர். இதில், பாதிக்கப்பட்ட ராஜேந்திரன், மணப்பாறை அரசு மருத்துவமனையில் முதலு-தவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்-பட்டார். இதுகுறித்து, ராமச்சந்திரனின் மனைவி பெருமாயி, 37, கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார், பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

