/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கி.புரத்தில் உலக நன்மைக்கு சண்டி யாக வேள்வி பூஜை
/
கி.புரத்தில் உலக நன்மைக்கு சண்டி யாக வேள்வி பூஜை
ADDED : டிச 29, 2025 07:26 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரத்தில், குருநாதன் பிடாரி அழகு நாச்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோ-விலில், ஆண்டுதோறும் உலக நன்மைக்காக சிறப்பு சண்டி யாக வேள்வி பூஜை நடத்தப்படுகி-றது.
அதன்படி, நேற்று காலை, 10:30 மணி முதல் சண்டி யாக வேள்வி சிறப்பு பூஜை நடந்தது. முன்-னதாக, யாக வேள்வி குண்டத்தில் கணபதி ஹோமம் செய்யப்பட்டு, யாக வேள்வி செய்யப்-பட்டது. இதில், பட்டு வாஸ்திரம், பட்டு துணிகள், பட்டு சேலைகள், பூர்ணாஹூதி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்-பட்டது.யாக வேள்வியில் வைக்கப்பட்டிருந்த காவிரி புனிதநீர் கலசத்தை, கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டது. பின், புனித நீரை, குருநாதன் சுவாமி மற்றும் பிடாரி அழகு நாச்சியம்மன் மீது ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டு, பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்-பாலித்தார். சுற்று வட்டார பகுதி கிராம மக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

