/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி அருகே அடுக்குமாடி குடியிருப்பை திறந்து வைத்த முதல்வர்
/
அரவக்குறிச்சி அருகே அடுக்குமாடி குடியிருப்பை திறந்து வைத்த முதல்வர்
அரவக்குறிச்சி அருகே அடுக்குமாடி குடியிருப்பை திறந்து வைத்த முதல்வர்
அரவக்குறிச்சி அருகே அடுக்குமாடி குடியிருப்பை திறந்து வைத்த முதல்வர்
ADDED : மே 21, 2025 01:12 AM
அரவக்குறிச்சி ;தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், அரவக்குறிச்சி அருகே வேலப்பாடியில், ரூ.2.95 கோடி மதிப்பில் கட்டப்பட்ட, 32 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை, முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
ஒரு குடியிருப்பு, 400 சதுரஅடி பரப்பளவில், ரூ.9.23 லட்சம் மதிப்பில் படுக்கையறை, வரவேற்பறை, சமையலறை, குளியலறை மற்றும் கழிவறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, காணொலி காட்சி வாயிலாக அடுக்குமாடி குடியிருப்புகளை நேற்று திறந்து வைத்தார். அரவக்குறிச்சி பேரூராட்சி, பள்ளப்பட்டி நகராட்சி பகுதிகளில் வசித்து வரும், வீடற்ற நகர்ப்புற ஏழைகள் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
குடியிருப்புகளுக்கு வேலம்பாடி ஊராட்சி மூலம் குடிநீர் இணைப்பும், ஆழ்துளை கிணறு மற்றும் மின் மோட்டார் அறையுடன் கூடிய தரைமட்ட நீர் தேக்க தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கழிவுநீர் தொட்டி, வடிகால் மற்றும் தெரு விளக்கு உட்கட்டமைப்புடன் குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் தங்கவேல், 30 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் கரூர் எம்.பி., ஜோதிமணி, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.,இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளப்பட்டி நகர்மன்ற தலைவர் முனவர் ஜான், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரிய நாமக்கல் கோட்ட நிர்வாக பொறியாளர் குமாரதுரை, கரூர் உட்கோட்ட உதவி நிர்வாக பொறியாளர் தமிழரசு, உதவி பொறியாளர் பாலாஜி, அரவக்குறிச்சி தாசில்தார் மகேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.