sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மண்மங்கலம் பிரிவில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணி 85 சதவீதம் நிறைவு

/

மண்மங்கலம் பிரிவில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணி 85 சதவீதம் நிறைவு

மண்மங்கலம் பிரிவில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணி 85 சதவீதம் நிறைவு

மண்மங்கலம் பிரிவில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணி 85 சதவீதம் நிறைவு


ADDED : டிச 06, 2024 07:27 AM

Google News

ADDED : டிச 06, 2024 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மண்மங்கலம் பிரிவில், உயர்மட்ட பாலம் கட்டுமான பணி, 85 சதவீதம் நிறைவடைந்த நிலையில், ஜனவரி மாதம் சோதனை ஓட்டம் நடக்கிறது.

கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தவிட்டுப்பாளையம், மண்-மங்கலம், செம்மடை பிரிவு, பெரிச்சிபாளையம் பிரிவு, மதுரை நெடுஞ்சாலையில் பெரிய ஆண்டாங்கோவில் வளைவு, திருச்சி நெடுஞ்சாலையில் வீரராக்கியம் பிரிவு, கோடங்கிப்பட்டி பிரிவு ஆகிய பகுதிகளில் கிராமங்களில் இருந்து செல்லும் இணைப்பு சாலைகள் உள்ளன.

அந்த பகுதிகளில், 18 ஆண்டுகளாக ஏற்பட்ட விபத்துகளில் பலர் உயிரிழந்துள்ளனர். விபத்து நடக்கும் போதெல்லாம், அந்த பகுதிகளில் சாலை மறி-யலில் ஈடுபடுவர். தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் பல மணி நேரம் அணிவகுத்து நிற்கும். இதனால், விபத்து ஏற்படும் பகுதிகளில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், முதல் கட்டமாக கரூர் மாவட்டம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில், பெரிச்சிபாளையம் பிரிவு, பெரிய ஆண்டாங்கோவில் பிரிவு, செம்மடை பிரிவு, தவிட்டுப்-பாளையம் பிரிவு ஆகிய இடங்களில் உயர்மட்ட பாலங்கள், கட்டப்பட்டு பொதுமக்கள் பயன் பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. இந்தாண்டு ஜனவரியில் மண்மங்கலம் பிரிவில், 22 கோடி ரூபாய் மதிப்பில், உயர்மட்ட பாலம் கட்டும் பணி விறுவிறுப்-பாக நடந்து வருகிறது. இங்கு, 12 மீட்டர் அகலம், 5.5 மீட்டர் உயரத்தில் பாலம் கட்டுமான பணிகள் நடக்கிறது.

தற்போது பாலம் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில், சாலை போடும் பணி நடந்து வருகிறது. தற்போது, 85 சதவீதம் பணிகள் முடிவடைந்து விட்டதால், வரும் ஜனவரி முதல் சோதனை ஓட்டமாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். பிப்ரவரியில், மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us