ADDED : அக் 13, 2025 02:16 AM
கரூர்: கரூரில் இருந்து, 60க்கும் மேற்பட்ட பஸ்கள், தான்தோன்றி-மலை, காந்தி கிராமம், ஏமூர், அரசு கலை கல்லுாரி, புன்னம், வெங்கமேடு, அரசு காலனி, கோடங்கிப்பட்டி, சாரதா கல்லுாரி, குட்டை கடை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகி-றது.
இதில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பொது மக்கள் பயணம் செய்கின்றனர். மினி பஸ்களில் அளவுக்கு அதிகமான பயணிகள் ஏற்றி செல்வ-தோடு, படிக்கட்டுகளில் நின்று ஆபத்தான பயணம் மேற்கொள்-கின்றனர். சில விபத்துக்கு பின், லைட் ஹவுஸ் கார்னர், சர்ச் கார்னர் வழியாக மினி பஸ்களில் படிக்கட்டுகளில் பயணம் செய்-பவர்களை கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதனால், ஓரளவு படிக்கட்டு பயணம் குறைந்தது. தற்போது, அதிகமான பயணிகள் மினி பஸ்களில் ஏற்றப்படுகின்றனர். இளைஞர்கள் ஆபத்தான நிலையில் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.