/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பிரதம மந்திரி கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வரும் 15 வரை அவகாசம்
/
பிரதம மந்திரி கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வரும் 15 வரை அவகாசம்
பிரதம மந்திரி கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வரும் 15 வரை அவகாசம்
பிரதம மந்திரி கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வரும் 15 வரை அவகாசம்
ADDED : அக் 08, 2025 01:32 AM
கரூர், 'பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க, வரும், அக்.,15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:
இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில், இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு, 2.50 லட்சம் ரூபாய் இருக்க வேண்டும். இதில், மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் வரும், 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தை சரிபார்க்க கால அவகாசம் வரும், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில், 9, பிளஸ் 1 வகுப்பு மாணவர், மாணவியர், https://scholarships.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். இதே இணைய தளத்தில் புதுப்பித்து கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு, கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.