/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கார்த்திகை மாத அமாவாசை அம்மனை தரிசனம் செய்த பக்தர்கள்
/
கார்த்திகை மாத அமாவாசை அம்மனை தரிசனம் செய்த பக்தர்கள்
கார்த்திகை மாத அமாவாசை அம்மனை தரிசனம் செய்த பக்தர்கள்
கார்த்திகை மாத அமாவாசை அம்மனை தரிசனம் செய்த பக்தர்கள்
ADDED : நவ 20, 2025 02:04 AM
கரூர், புன்னம் சத்திரம் கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு, கார்த்திகை மாத அமாவாசையையொட்டி, சிறப்பு அலங்காரம் நடந்தது.
பிரசித்தி பெற்ற, கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி கோவிலில், கார்த்திகை மாத அமா வாசையையொட்டி, மூலவர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து, சந்தன காப்பு மற்றும் சிறப்பு பூக்கள் அலங்காரத்தில், மூலவர் அலங்கார பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.அதேபோல், தலையூர் மாரியம்மன் கோவில், புகழூர் மாரியம்மன் கோவில், பொன்னாச்சி அம்மன் கோவில், திருகாடுதுறை மாரியம்மன் கோவில், தோட்டக்குறிச்சி மலையம்மன் கோவில், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
* கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் செய்து மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
* மாயனுார் காவிரி ஆற்றங்கரையில், மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. நேற்று பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

