ADDED : ஜூன் 03, 2026 04:07 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர், காமராஜர் சாலை பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார், 42; டிரைவர். இவர், சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
கடந்த, 29 இரவு, கரூர் மக்கள் பாதை பகுதியில் நடந்து சென்றபோது, சசிக்குமார் தவறி கீழே விழுந்தார். தலையில் படுகாயமடைந்த சசிக்குமார், திருச்சி அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். சசிக்குமாரின் மனைவி பாக்கியலட்சுமி, 39, கொடுத்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
