sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

திடீரென நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி டிரைவர் உயிரிழப்பு

/

திடீரென நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி டிரைவர் உயிரிழப்பு

திடீரென நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி டிரைவர் உயிரிழப்பு

திடீரென நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி டிரைவர் உயிரிழப்பு


ADDED : செப் 21, 2025 01:16 AM

Google News

ADDED : செப் 21, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, திடீரென லாரியை நிறுத்தியதால், பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு லாரி மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த சுரட்டாபாளையத்தை சேர்ந்தவர் சின்னப்பொண்ணு, 28. இவரது கணவர் சந்திரகாந்த், 30, லாரி டிரைவர். இவர் கடந்த 16 மதியம் 2:00 மணியளவில் கோவையிலிருந்து பெரம்பலுார் நோக்கி திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில், ஆர்.புதுக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது, தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரி, எந்தவித செய்கையும் காட்டாமல், திடீரென பிரேக் போட்டதால், பின்னால் வந்த லாரி மோதியது.இந்த விபத்தில் டிரைவர் சந்திரகாந்துக்கு வயிறு, நெஞ்சு ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த, 18ம் தேதி உயிரிழந்தார்.

திடீரென லாரியை நிறுத்தி விபத்தை ஏற்படுத்திய, லாரி டிரைவர் அரியலூர் மாவட்டம், மேலப்பழுவூர் நடுத்தெருவை சேர்ந்த வினோத், 25, மீது மாயனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us