/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மகளுக்கு பாலியல் தொல்லைதந்தைக்கு 5 ஆண்டுகள் சிறை
/
மகளுக்கு பாலியல் தொல்லைதந்தைக்கு 5 ஆண்டுகள் சிறை
ADDED : டிச 18, 2024 01:55 AM
கரூர், டிச. 18-
கரூர் அருகே, மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியை சேர்ந்தவர், 47 வயது நாடக நடிகர். இவருக்கு, 14 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், தனது தந்தை தமக்கு கடந்த மார்ச்., 1 முதல் பாலியல் தொல்லை கொடுப்பதாக ஏப்., 14ல், கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இதையடுத்து, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, சிறுமியின் தந்தையை போக்சோ சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தார். இதுதொடர்பான வழக்கு, கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, தந்தைக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிபதி தங்கவேல் நேற்று தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு, தமிழக அரசு, இரண்டு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.