/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வே.பாளையம் அருகே கோழிப்பண்ணையில் தீ
/
வே.பாளையம் அருகே கோழிப்பண்ணையில் தீ
ADDED : ஜன 06, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், அத்திப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்-கராஜ், 58; விவசாயி. இவர், வேலாயுதம்பாளையம் அருகே, மேட்டுக்கடை பகுதியில், கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். கோழிப்பண்ணைக்கு அருகே வீடும் உள்ளது. கடந்த, 1ல் வீட்டில் இருந்த காஸ் சிலிண்டரில் இருந்துதீ விபத்து ஏற்பட்டது.
அப்போது அருகிலிருந்த கோழிப்பண்-ணைக்கும் தீ பரவியது. தகவலறிந்த வேலாயுதம்பாளையம் தீய-ணைப்புத்துறை வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். ஆனால், கோழிக்குஞ்சுகள் தீயில் கருகின. இதுகுறித்து, தங்கராஜ் அளித்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.