/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணை பகுதியில் மீன்கள் விற்பனை மும்முரம்
/
மாயனுார் கதவணை பகுதியில் மீன்கள் விற்பனை மும்முரம்
மாயனுார் கதவணை பகுதியில் மீன்கள் விற்பனை மும்முரம்
மாயனுார் கதவணை பகுதியில் மீன்கள் விற்பனை மும்முரம்
ADDED : டிச 26, 2024 03:04 AM
கிருஷ்ணராயபுரம்: மாயனுார் கதவணை அருகில், மீன்கள் விற்பனை மும்முரமாக நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இங்கு காவிரி நீர் சேமிக்கப்படுகி-றது. அதில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று, மீன்களை பிடித்து வந்து விற்பனை செய்கின்-றனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் மீன்கள் வாங்க மக்கள் அதிகம்பேர் வந்திருந்தனர்.
ஜிலேப்பி, கெண்டை, விரால் ஆகிய ரக மீன்கள், கதவணை அருகில் செல்லும் கட்டளை வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை நடக்கிறது. ஜிலேப்பி மீன்கள் கிலோ, 150 ரூபாய், கெண்டை மீன்கள் கிலோ, 100 ரூபாய், விரால் மீன்கள் கிலோ, 650 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று மட்டும், 400 கிலோ மீன்கள் விற்பனை செய்யப்பட்டது.