/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விடுமுறை தினத்தால் மீன் விற்பனை 'ஜோர்'
/
விடுமுறை தினத்தால் மீன் விற்பனை 'ஜோர்'
ADDED : அக் 13, 2025 02:12 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் காவிரி நீர் சேமிக்கப்படுகிறது. சேமிக்கப்படும் நீரில் மீன்கள் வளர்க்கப்படு-கிறது. மீன்களை உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று பிடித்து கொண்டு வந்து, கட்டளை வாய்க்கால் கரையில் வைத்து விற்-பனை செய்கின்றனர்.
இதில், ஜிலேபி மீன் கிலோ, 130 ரூபாய், கெண்டை, 90 ரூபாய், விரால், 600 ரூபாய், பாறை, 200 ரூபாய் என்ற விலையில் விற்-பனை செய்யப்பட்டது. கரூர், குளித்தலை, லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம், புலியூர், சேங்கல், பஞ்சப்பட்டி பகுதிகளை சேர்ந்த மக்கள் மீன்களை வாங்கி சென்றனர். விடுமுறை தினம் என்பதால், 400 கிலோ வரை விற்பனையானது.