sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தொடர் மழை, பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விலை உயர்வு

/

தொடர் மழை, பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விலை உயர்வு

தொடர் மழை, பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விலை உயர்வு

தொடர் மழை, பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விலை உயர்வு


ADDED : நவ 18, 2025 01:27 AM

Google News

ADDED : நவ 18, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக, பூக்கள் விலை கணிசமான அளவில் உயர்ந்துள்ளது.தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் பரவலாக, நாள்தோறும் மழை பெய்து வருகிறது.

கரூர் மாவட்டத்தில் பூக்கள் சாகுபடி நடக்கும், காவிரியாற்று பகுதிகளான கரூர், கிருஷ்ண ராயபுரம், குளித்தலை வட்டார பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.மேலும் நாமக்கல், திண்டுக்கல், சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து, கரூருக்கு நாள்தோறும் பூக்கள் விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில் தொடர் மழை, கார்த்திகை மாத பனிப் பொழிவு காரணமாக, பூக்கள் சாகுபடி குறைந்துள்ளது. வரத்து குறைவு மற்றும் கார்த்திகை மாதம், சபரிமலை சீசன் துவங்கியதால் கரூரில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

கடந்த மாதம் ஒரு கிலோ மல்லிகை பூக்கள், 800 ரூபாய் வரை விற்றது. தற்போது, 1,000 ரூபாய் முதல், 1,200 ரூபாய் வரை விற்கிறது. முல்லை பூ, 400 ரூபாயில் இருந்து, 500 ரூபாய், அரளி, 80 ரூபாயில் இருந்து, 120 ரூபாய், சம்பங்கி, 60 ரூபாயில் இருந்து, 80 ரூபாய், ரோஜா, 150 ரூபாயில் இருந்து, 200 ரூபாய்க்கு விலை உயர்ந்துள்ளது.

அதேபோல் துளசி, மரிக்கொழுந்து, சாமந்தி, கோழிக்கொண்டை பூக்கள் விலைகளும் கிலோவுக்கு, 10 முதல், 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.






      Dinamalar
      Follow us