/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
4 கிராமங்களில் மேல்நிலை தொட்டி கட்டுமான பணிக்கு பூமி பூஜை
/
4 கிராமங்களில் மேல்நிலை தொட்டி கட்டுமான பணிக்கு பூமி பூஜை
4 கிராமங்களில் மேல்நிலை தொட்டி கட்டுமான பணிக்கு பூமி பூஜை
4 கிராமங்களில் மேல்நிலை தொட்டி கட்டுமான பணிக்கு பூமி பூஜை
ADDED : நவ 08, 2025 04:05 AM
குளித்தலை,: குளித்தலை அடுத்த பொய்யாமணி பஞ்., கோட்டையார் தோட்டத்தில், பெரம்பலுார் எம்.பி., அருண்நேரு தொகுதி மேம்-பாட்டு நிதியிலிருந்து, ரூ. 25 லட்சம் மதிப்பில் மேல்நிலை தொட்டி கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடந்தது. குளித்தலை தி.மு.க., ஒன்றிய செயலர் தியாகராஜன் தலைமை வகித்தார்.
மாஜி மாவட்ட பஞ்., குழு துணைத் தலைவர் தேன்மொழி தியா-கராஜன், மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பிரதி-நிதி பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளித்தலை தி.மு.க., எம்.எல்.ஏ., மாணிக்கம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.இதேபோல் திம்மம்பட்டி பஞ்., முதலிகவுண்டனுாரில் ரூ.18 லட்சம் மதிப்பிலும், வைகைநல்லுார் பஞ்., தாளியாம்பட்டி கிரா-மத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலும், குப்பாண்டியூரில் ரூ. 18 லட்சம் மதிப்பிலும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமான பணிக்கான பூமி பூஜை
நடந்தது.
தி.மு.க., பிரதிநிதிகள், குளித்தலை மற்றும் தோகைமலை யூனியன் கமிஷனர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

