sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் தொடரும் கடும் பனிப்பொழிவு எலுமிச்சை பழத்துக்கு விலை கிடைக்கல

/

கரூரில் தொடரும் கடும் பனிப்பொழிவு எலுமிச்சை பழத்துக்கு விலை கிடைக்கல

கரூரில் தொடரும் கடும் பனிப்பொழிவு எலுமிச்சை பழத்துக்கு விலை கிடைக்கல

கரூரில் தொடரும் கடும் பனிப்பொழிவு எலுமிச்சை பழத்துக்கு விலை கிடைக்கல


ADDED : டிச 30, 2025 05:13 AM

Google News

ADDED : டிச 30, 2025 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டத்தில், எலுமிச்சை பழம் விளைச்சல் அதிகளவில் இல்லை. இதனால், திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை, அய்யம்பாளையம் பட்டி, வீரன்பட்டி மற்றும் கர்நாடகா மாநிலம் பிஜப்பூர், ஆந்திரா மாநிலங்களில் இருந்து, கரூர் மார்கெட்டுக்கு எலுமிச்சை பழம் விற்பனைக்காக, கொண்டு வரப்படுகிறது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன், கிலோ எலுமிச்சை பழம், 100 ரூபாய் வரை விற்றது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பெய்த மழை காரணமாக, கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்கெட்டுக்கு எலுமிச்சை பழம் வரத்து அதிகரித்துள் ளது. இதனால், ஒரு கிலோ எலுமிச்சை பழம், 50 ரூபாய் முதல், 60 ரூபாய் வரை மட்டும் தற்போது விற்பனையாகிறது.இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது:

கடந்த, இரண்டு மாத காலமாக கடும் பனிப் பொழிவு உள்ளது. காய்ச்சல், சளி, வறட்டு இருமல் காரணமாக, உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும், எலுமிச்சை பழத்துக்கு தேவை குறைந்து விட்டது. இதனால், விலையும் பல மடங்கும் குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றுள்ள நிலையில், கோடைகாலம் துவங்கினால், எலுமிச்சை பழத்துக்கு தேவை அதிகரிக்கும். அப்போது, விலை உயர வாய்ப்புண்டு.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us