/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பூச்சிக்கொல்லி பயன்பாடு கட்டுக்குள் வைப்பது அவசியம்:கலெக்டர் எச்சரிக்கை
/
பூச்சிக்கொல்லி பயன்பாடு கட்டுக்குள் வைப்பது அவசியம்:கலெக்டர் எச்சரிக்கை
பூச்சிக்கொல்லி பயன்பாடு கட்டுக்குள் வைப்பது அவசியம்:கலெக்டர் எச்சரிக்கை
பூச்சிக்கொல்லி பயன்பாடு கட்டுக்குள் வைப்பது அவசியம்:கலெக்டர் எச்சரிக்கை
ADDED : அக் 15, 2025 01:49 AM
கரூர், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தும் அளவை, கட்டுக்குள் வைப்பது அவசியம் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்டத்தில் வாழை, முருங்கை, மரவள்ளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொடிவகை காய்கறி பயிர்கள் பல ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்படுகிறது. வேதி உரங்களின் பயன்பாட்டை குறைத்து, கூடுமானவரை இயற்கை உரங்களை பயன்படுத்த சமீப காலமாக தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பெரும்பாலான பகுதிகளில், விவ
சாயிகள் இயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தி வருகின்றனர். தோட்டக்கலை பயிர்களுக்கு அதிகளவில் வேதி உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகளை பயன்படுத்தும் போது மண்ணின் வளம் பாதிக்கப்படுவதுடன், விவசாய பயிர்களின் வளர்ச்சி பாதித்து, மகசூல் குறைந்து வருகிறது. பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் போது, அதன் அளவை கட்டுக்குள் வைத்து பயன்படுத்துவது மிகவும் அவசியம். உணவு பொருட்களில் பூச்சிக்கொல்லி மருந்து கலப்பதால், மக்களின் உடல் நலத்திற்கு ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளன.
ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளான பூச்சிகளின் வளர்ச்சி மற்றும் பரவலை தொடர்ந்து கண்காணிப்பது, பூச்சிகளை உண்ணும் பூச்சிகள் அல்லது ஒட்டுண்ணிகளை பயன்படுத்துதல், பயிர் சுழற்சி, கலப்பின பயிர்கள், நிலம் தயாரிப்பு போன்ற விவசாய நடைமுறைகள், பூச்சி பொறிகள், கைகளால் பூச்சிகளை அகற்றுதல், பூச்சி எதிர்ப்பு பயிர்களை நடவு செய்தல், விதை நேர்த்தி செய்தல், போன்றவற்றை பின்பற்றுவது நல்லது.
பூச்சி கொல்லிகளின் நச்சு தன்மை அளவினை அடையாளம் காண்பதற்காக சிவப்பு முத்திரை மிகவும் நச்சு, மஞ்சள் முத்திரை அதிக நச்சு, பச்சை முத்திரை சற்று நச்சு என முத்திரைகள் ஒட்டப்படுகிறது. பூச்சிக்கொல்லி பயன்பாட்டை குறைப்பதற்கான வழிமுறைகளை, விவசாயிகள் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.