sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் கொசுக்கள் உற்பத்தி மீண்டும் அதிகரிப்பால் அவதி

/

கரூரில் கொசுக்கள் உற்பத்தி மீண்டும் அதிகரிப்பால் அவதி

கரூரில் கொசுக்கள் உற்பத்தி மீண்டும் அதிகரிப்பால் அவதி

கரூரில் கொசுக்கள் உற்பத்தி மீண்டும் அதிகரிப்பால் அவதி


ADDED : மே 07, 2024 07:23 AM

Google News

ADDED : மே 07, 2024 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூர் மாநகராட்சி பகுதியை சுற்றி, அமராவதி ஆறு மற்றும் இரட்டை வாய்க்கால் உள்ளது.

மேலும், அமராவதி ஆற்றில் இருந்து பிரியும் கிளை வாய்க்காலும்உள்ளது. வாய்க்கால்களில் தற்போது மழை தண்ணீருடன், சாக்கடை நீரும் செல்கிறது. இதனால், மாநகராட்சி பகுதியில் பெரிய அளவிலான கொசுக்கள் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக கோடைக்காலத்தையொட்டி, பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டு மொட்டை மாடி, திறந்த வெளிப்பகுதிகளில் துாங்குகின்றனர். ஆனால், கொசுக்கடியால் துாங்க முடியாமல் நிம்மதி இழந்துள்ளனர். குறிப்பாக, பழைய சணப்பிரட்டி பஞ்சாயத்து, இரட்டை வாய்க்கால் செல்லும் பகுதி, அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிப்போர், கொசுக்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர்.கொசுக்கடியால் பாதிக்கப்பட்டு, பல்வேறு நோய்களுக்கு பொதுமக்கள் ஆளாவதை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய், வாய்க்கால் பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.குறிப்பாக, கரூர் மாநகராட்சியில் உள்ள எந்த பகுதிகளிலும், குப்பைகளை தேங்க விடாமல் அப்புறப்படுத்த வேண்டும். மேலும், கரூர் மாநகராட்சி சார்பில் தரமான கொசு ஒழிப்பு மருந்துகளை கொள்முதல் செய்து, முறையாக பயன்படுத்த வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us