sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நிதி நிறுவன ஊழியர் கொலை மேலும் ஒருவர் மீது குண்டாஸ்

/

நிதி நிறுவன ஊழியர் கொலை மேலும் ஒருவர் மீது குண்டாஸ்

நிதி நிறுவன ஊழியர் கொலை மேலும் ஒருவர் மீது குண்டாஸ்

நிதி நிறுவன ஊழியர் கொலை மேலும் ஒருவர் மீது குண்டாஸ்


ADDED : செப் 28, 2024 03:54 AM

Google News

ADDED : செப் 28, 2024 03:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, நிதி நிறுவன ஊழியர் கொலை வழக்கில் கைதான, ஒருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம், காந்தி கிராமம் கம்பன் தெருவை சேர்ந்த, செந்தில் குமார் என்பவரது மகன் ஜீவா, 19; நிதி நிறுவன ஊழியர். இவர் கடந்த ஜூலை, 27 ல் முன் விரோதம் காரண-மாக, வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக, கரூர் தெற்கு காந்தி கிராமத்தை சேர்ந்த சசிக்குமார், 27; பாண்டீஸ்வரன், 20; மதன், 19; சுதாகர், 21; அருண்குமார், 20; மதன் கார்த்திக், 21; கபில் குமார், 20; ஹரி பிரசாத், 20; ஆகிய எட்டு பேரை தான்தோன்றிமலை போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.அதில் சசிக்குமார், மதன், பாண்டீஸ்வரன், சுதாகர், மதன் கார்த்திக், அருண் குமார், ஹரி பிரசாத் ஆகிய ஏழு பேர் ஏற்க-னவே, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று கபில் குமாரையும், எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரைபடி, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, கலெக்டர்

தங்கவேல் உத்தரவிட்டார்.

இதையடுத்து, குண்டர் சட்டத்தின் கைது செய்யப்பட்டதற்கான நகலை, தான்தோன்றிமலை போலீசார், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, கபில் குமாரிடம் வழங்கினர்.






      Dinamalar
      Follow us