/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் இன்று மாரத்தான், வாக்கத்தான் போட்டி
/
கரூரில் இன்று மாரத்தான், வாக்கத்தான் போட்டி
ADDED : நவ 09, 2025 03:47 AM
கரூர்: கரூர் மாவட்ட சி.ஐ.ஐ., யங் இந்தியன்ஸ் அமைப்பு சார்பில், கரூர் விஷன், 2030 என்ற தலைப்பில் மாரத்தான் மற்றும் வாக்-கத்தான் போட்டி இன்று (9ல்) நடக்கிறது.
கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் இருந்து தொடங்கும் மாரத்தான், வாக்கத்தான் போட்டிகளை இன்று அதிகாலை, 5:30 மணிக்கு கரூர் தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி தொடங்கி வைக்கிறார். இரண்டு போட்டிகளிலும், 9,700 பேர் பங்கேற்க உள்ளனர்.வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக, 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக, 5,000 ரூபாய், மூன்றாம் பரிசாக, 3,000 ரூபாய் மற்றும் கோப்பை, சான்றிதழ் வழங்க ப்படும். நான்காம் பரிசாக கோப்பை, சான்றிதழ் வழங்கப்படும்.
அதை தொடர்ந்து காலை, 9:00 மணிக்கு கரூர் அட்லஸ் கலைய-ரங்கில் கரூர், 2030 விஷன் தொடர்பான, கருத்தரங்கம் நடக்கிறது.
அதில், எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி, தொழில் அதிபர்கள் நாக-ராஜன், தேவராஜன், ேஹமலதா, சந்தோஷ் முருகானந்தம் மற்றும் தொழில் முனைவோர் பங்கேற்கின்றனர்.

